ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரான்ஸில் கடந்த 8ந் தேதி கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. வருகிற 19ந் தேதி நிறைவடைகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழ் நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யாராய், ஹூமா குரேஷி, தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத், சோனம் கபூர், மல்லிகா ஷெராத் உள்பட பலர் கலந்து கொண்டு வருகிறார்கள்.
நேற்று மல்லிகா ஷெராவத் பட விழா நடக்கும் வளாகத்திற்குள் 12 அடி உயரமும், 8 அடி நீளமும் கொண்ட ஒரு இரும்பு கூண்டுக்குள் 12 மணிநேரம் தன்னை தானே அடைத்துக் கொண்டு திடீர் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார். பெண்களின் சுதந்திரத்திற்காகவும், குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை எதிர்த்தும் அவர் இந்த போராட்டத்தை நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கேன்ஸ் திரைப்பட விழாவில் இது என்னுடைய 9-வது ஆண்டு. இந்த விழாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் சென்று சேரும். இப்படி என்னை ஒரு சிறிய கூண்டுக்குள் அடைத்துக் கொள்வதால், சிறு பிள்ளைகள் வன்முறையின் காரணமாக எப்படிப்பட்ட கொடூர வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடிகிறது.
இது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு பெண்களும், குழந்தைகளும் பலியாக்கப்படுகிறார்கள். அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்" என்று கூறினார்.
மல்லிகா ஷெராவத் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக பல அமைப்புகள் நடத்தி வருவதும், தொடர்ந்து போராடி வருவதும் குறிப்பிடத்தக்கது.