ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை கவுசல்யா பக்தி படங்களில் நிறைய நடித்துள்ளார். ராஜகாளியம்மன், தாலி காத்த காளியம்மன் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. இப்போது மீண்டும் ஒரு பக்தி படத்தில் நடிக்கிறார். படத்தின் பெயர் உத்ரா.
காசி என்ற வில்லன் உத்ராவையும், அவளது காதலனையும் பிரித்து கொல்கிறான். இதனால் உத்ராவின் சாபத்தால் அந்த ஊரில் யாருக்கு கல்யாணம் நடந்தாலும் அவர்கள் ஒரு அரூபத்தால் கொல்லப்படுகிறார்கள். இதுபற்றி ஆராய கல்லூரி மாணவர்கள் குழு அந்த கிராமத்துக்கு செல்கிறது. அவர்களில் இருவர் அங்கு கல்யாணம் செய்கிறார்கள். அவர்கள் கொல்லப்படவில்லை.
அதன்பிறகுதான் உத்ராவின் சாபம் தெரிகிறது. உத்ரா, காசியை கொன்றால் சாபம் நீங்கும். ஆனால் அவன் கோவிலுக்குள் மறைந்து கொள்கிறான். ஆவியான உத்ராவை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறாள் அம்மன். இதனால் காசியை கொல்ல முடியவில்லை. இறுதியில் உத்ரா எப்படி காசியை கொன்றாள். சாபம் எப்படி நீங்கியது என்பது படத்தின் மீதி கதை. இதில் அம்மனாக கவுசல்யா நடிக்கிறார்.
உச்சகட்டம், நெல்லை சந்திப்பு படங்களை இயக்கிய நவீன் கிருஷ்ணா இயக்கி உள்ளார். விஸ்வா, விவாந்த், ரக்ஷா, ரோஷினி, சினேகா நாயர் என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறர்கள். ஆர்.கே.டிஜிட்டல் மீடியா சார்பில் ராஜ்குமார் தயாரித்திருக்கிறார். ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.