ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சென்னை : சமூக வலைதளங்களில் வெளியாகும் பல தகவல்கள் பொய்யானவை. சமீபத்தில்
குழந்தை கடத்த வந்தவர்கள் என்று கூறி திருவண்ணாமலையில் நடந்த தாக்குதலில்
மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸார்,
"சமூகவலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம், சந்தேகப்படும்
நபர்கள் யாரும் இருந்தால் போலீஸிடம் தெரிவிக்கவும், சட்டத்தை கையில்
எடுக்க வேண்டாம்" என மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்
இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன்,
டுவிட்டரில், "வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியவையாக இருப்பது
கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும்
முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள
குடிமக்களின் அடையாளமன்று. காவல் துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும்
கடமையும் ஆகும்" என பதவிட்டிருக்கிறார்.