14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
கோலிசோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன், தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார். "கோலிசோடா தங்களுக்கு முகவரி தேடும் சிறுவர்களின் கதை என்றால் இது இளைஞர்கள் தங்களுக்கு கிடைத்த முகவரியை தக்க வைக்க நடத்துகிற போராட்டம்" என்கிறார் விஜய் மில்டன். அவர் மேலும் கூறியதாவது:
இது கோலிசோடா கதையின் தொடர்ச்சி அல்ல. ஆனால் கதை ஒன்று தான். அதில் எங்கிருந்தோ வந்து ஒன்றாக இணைந்து சிறுவர்கள் தங்களுக்கான முகவரிக்காக போராடினார்கள். இதில் தங்களுக்கென்று முகவரி ஏற்படுத்திக் கொண்டவர்கள் அதை தக்க வைக்கவும், அடுத்தகட்டத்துக்கு செல்லவும் போராடுகிற கதை.
எனது தம்பி பரத் சீனு, சுபிக்ஷா, ரேகா, ரோகினி, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நானே ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். இளையராஜாவின் உதவியாளர் அச்சு இசை அமைத்திருக்கிறார்.
கோலிசோடாவில் ஏடிஎம் என்று ஒரு கேரக்டர் இருக்கும். அந்த கேரக்டர் போன்ற ஒரு கீ கேரக்டரில் சமுத்திரகனி நடித்திருக்கிறார். படத்தில் நடக்கும் எல்லா சம்பவத்திற்கும் அவர் தான் காரணமாக இருப்பார். கவுதம் மேனன் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
கோலிசோடாவில் நாயுடு என்ற தனி வில்லன் இருந்தார். இதில் அப்படி யாரும் கிடையாது. அடுத்தவன் முன்னேறகூடாது என்று நினைக்கிற அத்தனை பேரும் வில்லன் தான். எளியவர்களை வாழ விடாத இந்த சமூகம் தான் படத்தின் வில்லன். என்கிறார் விஜய் மில்டன்.