ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் விஜய் தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து சந்தித்து அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார். இதில் கேரளாவில் இருந்தும் நிறைய ரசிகர்கள் கலந்து கொண்டனர். அதில் சரண்யா வைசாக் என்கிற தீவிரமான பெண் ரசிகையும் ஒருவர்.
இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட விஜய்யின் கைகளை பிடித்தபடி அவர் நிற்கும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலானது. இந்த புகைப்படம் குறித்து, குறிப்பாக ரசிகையின் கைகளை பிடித்தது குறித்து விஜய் மீது சிலர் அவதூறான கருத்துக்களை கூற ஆரம்பித்தனர். இதனை கேள்விப்பட்ட சரண்யா வைசாக் நெகிழ்வான பேஸ்புக் பதிவு மூலம் சர்ச்சையை கிளப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
“விஜய் அண்ணாவை சந்திக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இதை சொல்லும் போதெல்லாம் என் நண்பர்கள், உறவினர்கள் என்னை கேலி செய்து வந்தனர். இந்தநிலையில் விஜய் அண்ணாவை சந்தித்த தருணத்தில், நான் அவரை சந்திக்க பல வருடங்களாக காத்திருந்தேன் என அவரிடம் கூறினேன். அதற்கு அவர் நமக்கான ரயில் வரும் வரை நாம காத்திருந்து தான் ஆகணும் என கூறினார். விஜய் அண்ணாவை அருகில் சந்தித்த பரவசத்தில் அவர் கைகளை பிடித்துக் கொள்ளட்டுமா என கேட்டேன்.. அன்புடன் என் கைகளை பிடித்துக்கொண்ட அவர் கேமராவை பார் என கூறினார். அவருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினேன்.. அதற்கு நன்றி கூறினார்” என விளக்கம் அளித்துள்ளார் சரண்யா வைசாக்.