ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது தோழியும், பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷ் கொலைக்கு பிறகு மத்திய அரசை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
"பிரதமர் மோடி என்னை விட சிறந்த நடிகர்" என்றார். இதனால் கர்நாடக மாநில பா.ஜ.கவினர் பிரகாஷ்ராஜூக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது...
நான் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்பினருக்கு எதிராக பேசி வருவதால், என்னை கொலை செய்ய சதி நடக்கிறது. சில இந்து அமைப்புகள் என்னை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் கொலை செய்யப்படலாம். அதற்கு நான் அஞ்சவில்லை. என்னிடம் இருந்து உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய அறிவு, நடிப்பு திறமையை யாராலும் பறிக்க முடியாது.
பிரதமர் மோடிக்கு நாட்டை ஆளத் தெரியவில்லை. நல்லாட்சி நடத்துவதாக கூறிய குழப்பங்களை உண்டாக்கி உள்ளார். இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள், மதவாத கட்சிகளுக்கும், வன்முறையை தூண்டும் கட்சிகளுக்கும் ஓட்டளிக்காமல், மக்களாட்சி நடத்தும் நல்ல கட்சிகளை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.