ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகை த்ரிஷாவுக்கு மே 4-ந் தேதியான நேற்று 35வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு ஏராளமான ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதில் ஆர்யாவும் குறிப்பிடத்தக்கவர்.
இவர் எப்போதுமே த்ரிஷாவை குஞ்சுமணி என்று தான் கலாய்ப்பார். இந்நிலையில், த்ரிஷாவின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைடியர் குஞ்சுமணி த்ரிஷா. இந்த வருடம் உங்கள் நடிப்பில் வெளியாகும் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு, த்ரிஷா பதிலுக்கு நன்றி மை டியர் ஜாம் என தெரிவித்திருக்கிறார். இதைப்பார்த்த நெட்டீசன்களில் ஒருவர், "நீங்க இரண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணக்கூடாது" என கேட்க, ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷாவிடம், "கல்யாணம் தான் கட்டிக்கிட்டி ஓடிப்போலமா.... இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா..." என கலாய்த்துள்ளார்.