ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒவ்வொரு நடிகருக்கும் தேசிய விருது என்பது கனவு. அதிலும் அதை நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதி கையால் பெறுவது எவ்வளவு பெரிய கவுரவம்.. ஆனால் நேற்று நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவை விருது அறிவிக்கப்பட்ட பலரும் புறக்கணித்துள்ளனர்.
இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், குறிப்பிட்ட சில பேர்களுக்கு மட்டுமே விருது வழங்குவார் என்றும், மீதியுள்ளவர்களுக்கு தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது கையால் விருது வழங்குவார் என்கிற முடிவு தான் இவர்கள் விழாவை புறக்கணிக்க காரணம். அதிருப்தி அடைந்துள்ள நட்சத்திரங்களை சமாதானப்படுத்தும் ஸ்மிருதி இரானியின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது.
இந்தநிலையில் சவுன்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி இந்த நிகழ்வை விமர்சித்துள்ளார். மேலும் சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு நடத்திய மாநில அரசு விருது வழங்கும் விழாவை பார்த்து தேசிய விருது கமிட்டியினர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். சிறப்பு விருந்தினர்களுக்கு அவர்கள் அளித்த கவுரவத்தை நினைத்து பெருமைப்படுகிறோம். நமக்கு ஒரே தேசம் தான்.. விருது பெறுபவர்களிடம் வேற்றுமை பாராட்டாதீர்கள்” என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி.