ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜீத்-விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் மோதிக்கொண்டு வந்ததைத்தான் நாம் பார்த்து வந்திருக்கிறோம். ஆனால் இப்போது அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. விஜய், அஜீத் ஆகிய இருவருமே திரைக்குப் பின்னால் நல்ல நண்பர்களாக இருப்பதைப் பார்த்து அவர்களது ரசிகர்களும் நட்பு வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில், விஜய்யின் மெர்சல் படத்திற்கு அரசியல்ரீதியான எதிர்ப்பு வந்தபோது, அதற்கு எதிராக விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து அஜீத் ரசிகர்களும் குரல் கொடுத்தார்கள்.
இந்த நிலையில், மே 1-ந்தேதி அஜீத்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதோடு, அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இணைந்து சென்னை மயிலாப்பூரில் உள்ள அன்னை இல்லம் என்ற முதியவர் காப்பகத்துக்கு சென்று அங்குள்ள முதியவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.