மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகை அமலாபால் இப்போது சுதந்திர பறவை, படங்களில் நடிக்கிறார், வெளிநாடு பறக்கிறார், நடனம் ஆடுகிறார், சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறார். யோகாவும் செய்கிறார். சமீபத்தில் சிரசாசன பயிற்சி எடுத்த அவர்... அதை தனது டுவிட்டரில் வீடியோவாக வெளியிட்டு. "நீங்களும் சிரசாசனம் பண்ணுங்க உடம்புக்கு ரொம்ப நல்லது" என்று அட்வைஸ் செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
கஷ்டமான வேலைகளை செய்யும்போது தலைகீழாக நின்றாலும் நடக்காது என்று சொல்ல கேட்டு இருக்கிறோம். தலைகீழாக நிற்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமானது, பயன் அளிக்க கூடியது என்பதை இப்போது உணர்ந்து இருக்கிறேன். யோகாவில் தலைகீழாக நிற்கும் சிரசாசனம் மிகவும் கஷ்டமானது. எல்லோராலும் எளிதாக அதை செய்ய முடியாது. கடும் பயிற்சிகள் மூலம் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆசனத்தை நான் ரொம்ப நாட்களாக கற்றேன்.
இதற்காக பயிற்சியாளர் வைத்து இருந்தேன். முதலில் சுவரை தாங்கலாக வைத்து தலைகீழாக நின்றேன். நான் செல்லும் இடமெல்லாம் யோகா பயிற்சி செய்யும் பாயையும் எடுத்துச் சென்றேன். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் தலைகீழாக நின்று பயிற்சி எடுத்தேன். இப்போது எனக்கு யாருடைய உதவியும் இல்லாமல் தலைகீழாக நின்று சிரசாசனம் போட முடிகிறது. இந்த ஆசனம் உடம்பை வலுவாக்கும். எல்லோரும் அவசியம் இதை செய்ய வேண்டும். இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.