ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் பாண்டியராஜனின் வாரிசான பிருத்வி ராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ள படம் தொட்ரா. பாக்யராஜின் சிஷ்யர் மதுராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் பேசிய பாண்டியராஜன், என் கவலையெல்லாம் பிருத்விராஜ் இன்னும் சினிமாவில் நல்ல நிலைக்கு வரவில்லையே என்பது தான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. இப்படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது என கண்கலங்கினார்.
பாக்யராஜ் பேசும்போது, பாண்டியராஜன் மகனை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறார். அவருக்கு முன்னால் வந்த நான், என் மகன் சாந்தனுவை எண்ணி எவ்வளவு வருத்தப்பட்டிருப்பேன். எல்லாவற்றுக்கும் காலநேரம் வரும், கவலைப்பட வேண்டியதில்லை என்றார்.