ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
உலக சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுகிறவர் ஜாக்கிசான். உலகம் முழுவதும் கோடிக் கணக்கான ரசிகர்களை கொண்டவர். அவரது மகள் எட்டாநங் தெருவில் வாழ்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி ஹாலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜாக்கிசானின் மகள் ஏன் தெருவில் வசிக்க வேண்டும் என்ற கேள்வி எழும். அதற்கு காரணம் எட்டாநங் ஒரு ஓரின சேர்க்கையாளர் (லெஸ்பியன்). அவரது தோழி ஆண்டி ஆன்டுடன் அவர் வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு வாழ்க்கை பிடிக்காமல் ஜாக்கிசான் அவரை விலக்கி வைத்திருப்பதாவும், அதனால் வாழ வசதியில்லாமல் பாலத்தின் அடியில் சாலையில் வாழ்ந்து வருவதாகவும் எட்டாநங் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எனக்கும், என் தோழிக்கும் இருப்பது புனிதமான அன்பு, உறவு. அதனை என் பெற்றோர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்களிடம் நான் பலமுறை உதவி கேட்டும் மறுத்துவிட்டார்கள். நாங்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பது தவறா? எங்களை ஏன் பிரிக்க பார்க்கிறார்கள். தயவு செய்து எங்களையும் எங்கள் அன்பையும் புரிந்து கொள்ளுங்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து பதில் அளித்துள்ள ஜாக்கிசான், "என் மகள் விஷயத்தில் ஒரு தந்தையாக நான் தோற்றுவிட்டேன். இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
ஜாக்கி சானின் மனைவி கூறுகையில், பணமில்லை என்றால் ஏதாவது வேலை தேடி, உழைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.