ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தை மக்கள் நீதி மையம் தத்தெடுக்க உள்ளது. அங்கு மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல் பேசியதாவது:
எங்களுக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதற்காக, கிராமங்களை தத்தெடுக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரம் மேம்பட மக்கள் நீதி மையம் பாடுபடும். வெற்றி பெற முடியும் என நினைக்கும் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். 12 ஆயிரம் கிராமங்களை தத்தெடுக்க முடியாது. 8 கிராமங்களை தத்தெடுக்கிறோம். மக்களின் ஆதரவு இருந்தால், 12 ஆயிரம் கிராமங்களை தத்தெடுக்க முடியும்.
கழிப்பறை சுத்தம் செய்வேன்
நான் உங்களில் ஒருவனாக வந்திருக்கின்றேன். இன்றிலிருந்து இது எங்களது கிராமம். அதிகத்தூரில் 100 கழிப்பறைகள் கட்டித்தரப்படும். அதிகத்தூரில் நீர் சேகரிக்கும் வழிகள் ஏற்படுத்தி தரப்படும். கழிப்பறைகளை தூய்மையாக வைத்து கொள்வது நமது பொறுப்பு. கழிப்பறை கட்டி முடித்த 2வது நாள் வந்து, அதனை சுத்தமாக வைத்து கொள்வது குறித்து நானே உதவி செய்வேன்
அதிகத்தூர் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். ஏரிகள் புணரமைக்கப்பட்டு, சிறிய அணைகள் மற்றும் மடைகள் அதிகத்தூரில் உருவாக்கப்படும். இந்த கிராமத்திற்கு தேவையான அனைத்தையும் இனி நாங்கள் செய்து தருகிறோம். அதிகத்தூர் கிராம பள்ளியில் கூடுதல் கட்டடங்கள், கழிப்பறைகள் கட்டித்தரப்படும்.
கடமை
எது முடியுமோ அதனை நாங்கள் செய்வோம். செய்ய முடியாததை, செய்வது குறித்து உங்களிடம் ஆலோசனை கேட்போம். இன்னும் நிறைய ஊர்களுக்கு அதை செய்ய வேண்டும் என்பது எங்களது ஆசை. மற்ற கிராமங்கள் வரை, எங்களை கொண்டு சேர்ப்பது உங்களது கடமை.