ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள படம் நடிகையர் திலகம். இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மே 9-ந்தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பேசியதாவது...
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. சாவித்ரியின் வாழ்க்கை படம் என்பதால் நம்மால் அதை பண்ண முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. சாவித்ரியின் சினிமா வாழ்க்கையை விட அவரது சொந்த வாழ்க்கை குறித்த விசயங்கள் தான் இந்த படத்தில் அதிகமாக இடம் பெறப்போவதாக சொன்னார்கள்.
அதனால் ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என்று பயந்தேன். பின்னர் இயக்குநர் நாக் அஸ்வின் தந்த தைரியத்தால் நடித்தேன். தொடரி படத்தால் தான் நடிகையர் திலகம் படம் வாய்ப்பு வந்தது. எந்த ஒரு படத்தின் கதையையும் ஒரு மணிநேரத்திற்கு மேல் கேட்டதில்லை. சாவித்ரி கதையை மூன்றரை மணிநேரம் கேட்டேன்.
சாவித்ரி போன்று உடைகள், ஹேர்ஸ்டைல் என முழுவதுமாக என்னை மாற்றி நடித்தேன். இரண்டரை மணி நேரம் மேக்கப் போடுவார்கள். மேக்கப் கலைவது வரை என்னால் சாப்பிட முடியாது. அதனால் ஜூஸ் தான் குடித்து வந்தேன். படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கவில்லை, எப்போதும் போன்று தான் நடித்தேன். இந்த படம் எனது கேரியரில் முக்கிய மைல்கல்லாக அமையும்.
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.