ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் போதை மருந்தை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடிகை மம்தா குல்கர்னி மற்றும் அவரது கணவர் விக்கி கோஸ்வாமி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் தானே போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம், மம்தா குல்கர்னியையும் அவரது கணவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் முடக்குமாறு உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்டமாக மும்பையில் உள்ள மம்தா குல்கர்னிக்கு சொந்தமான 3 அடுக்குமாடி குடியிருப்புகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 20 கோடி ரூபாயாகும். மேலும் அவரது சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.