ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் சேதுபதி சில வருடங்களுக்கு முன் பட வாய்ப்பு தேடி படக்கம்பெனிகளில் ஏறி இறங்கியபோது, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவனத்திலும் வாய்ப்பு கேட்டிருக்கிறார். அப்போது மணிரத்னத்துக்காக பல நாட்கள் காத்திருந்தும் அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.
தற்போது முன்னணி நடிகராகிவிட்ட விஜய்சேதுபதியை மணிரத்னம் தேடி வந்து தன்னுடைய செக்க சிவந்த வானம் படத்தில் நடிக்க வைத்துள்ளார். அவரது இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், தியாகராஜன், பிரகாஷ் ராஜ் முதலானோர் நடிக்கும் படம் செக்க சிவந்த வானம்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது சினிமா வேலைநிறுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் துவங்கியுள்ளது. விஜய் சேதுபதியும் முதன் முதலாக கலந்து கொண்டுள்ளார்.
முதல்நாள் படப்பிடிப்பின்போது அவரை சந்திக்க காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பழைய சம்பவத்தை மணிரத்னத்திடம் நினைவு கூர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதைக்கேட்ட மணிரத்னம் சின்ன புன்முறுவலுடன் நகர்ந்து சென்றாராம்.