ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்குத் திரையுலகத்தில் ஸ்ரீ ரெட்டியின் புகார் ஆரம்பமானதிலிருந்தே தொடர்ந்து பலவித மாற்றங்கள் நடந்து வருகிறது. பிரபல முன்னணி நடிகரான பவன்கல்யாணைப் பற்றியும், அவரது அம்மா பற்றியும் அசிங்கமாகப் பேசினார் ஸ்ரீ ரெட்டி. அவரை அப்படி பேச வைத்தது தான்தான் என இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளிப்படையாகத் தெரிவித்தார். அதன்பின் பவன்கல்யாண் தன்னுடைய அம்மாவைப் பற்றி அவதூறாகப் பேசியது மன்னிக்க முடியாதது என அதுபற்றி செய்தி ஒளிபரப்பிய சேனல்களைப் புறக்கணிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் கடும் புயலைக் கிளப்பியுள்ளது.
இனி, தெலுங்கு செய்தி சேனல்களுக்கு சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் வழங்கக் கூடாதென முக்கிய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் எந்த ஒரு பேட்டியோ, இசை வெளியீட்டு நிகழ்வோ தரவேண்டாம் என அவர்கள் விவாதித்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், செய்தி சேனல்களுக்கு திரைப்பட விளம்பரங்கள் கொடுப்பதையும் நிறுத்திவிடலாம் என்றும் முடிவெடுத்திருக்கிறார்களாம். வெறும், பொழுதுபோக்கு சேனல்களுக்கு மட்டும் இனி நிகழ்ச்சிகளைத் தரலாம் என பேசியிருக்கிறார்களாம்.
தெலுங்கில் செய்தி சேனல்கள் சினிமா விளம்பரங்களால் நல்ல வருமானம் பெற்று வருகிறார்கள். வருமானத்தையும் வாங்கிக் கொண்டு திரையுலகத்தைச் சார்ந்தவர்களை தரக் குறைவாக விமர்சிப்பது சரியல்ல என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.