ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபகாலமாக பெண்கள் மற்றும் சின்னஞ்சிறு பிள்ளைகள் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். காஷ்மீர் சம்பவத்திற்கு பிறகு பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் நாடு முழுக்க ஒலிக்க தொடங்கின.
இந்நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு துாக்கு தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தினார். இந்த சட்டம், உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அதேசமயம், இந்த விஷயத்தில் சிறுமிகள் என்று மட்டும் எடுத்து கொள்ளாமல் எல்லா தரப்பு பெண்களுக்கும் நடக்கும் பாலியல் சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கருத்து பரவ தொடங்கி இருக்கிறது.
இதே கருத்தை நடிகை வரலட்சுமியும் கூறியுள்ளார். அவர் தன் டுவிட்டரில், "டீன் ஏஜ் பெண்ணாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அனைத்து பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும். ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவரை தொடக்கூடாது" என கூறியுள்ளார்.