ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள படம் 'கரு'. சாய் பல்லவி நடிக்கும் இப்படம், ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸாவதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் படத்தின் தலைப்பான கரு என்பது தியா என மாற்றப்பட்டு இருக்கிறது.
'கரு' டைட்டிலை 'தியா' என்று மாற்றி வைத்ததற்கான காரணம் என்ன? இது குறித்து எந்த தகவலையும் படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் பெயர் மாற்றத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
அதாவது, கரு என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு படத்தைத் தயாரித்து வரும் மணிமாறன் என்பவர் தொடர்ந்த வழக்கில், லைகா தயாரிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய படத்துக்கு “கரு”என்ற படத்தலைப்பை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்ல, படத்தை வெளியிடவும் தடை விதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் கரு படத்தின் பெயரை தியா என்று பெயர் மாற்றம் செய்த லைகா நிறுவனம், ஏப்ரல் 27 ந் தேதி ரிலீஸ் என விளம்பரம் செய்து வருகிறது. தணிக்கை செய்யப்பட்ட படத்தின் பெயரை மாற்றம் செய்தால் மீண்டும் புதிய பெயரில் படத்திற்கும், டிரைலருக்கும் தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும், அதன் பிறகே படத்தை வெளியிட முடியும் என்பது விதி.
தியா என்ற மாற்றப்பட்டதால் மீண்டும் தணிக்கை செய்து சான்றிதழ் வாங்க பல நாட்கள் ஆகும். இந்த சூழலில் ஏப்ரல் 27 தியா வெளியீடு என்று வெளியாகும் செய்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறது.