ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொரட்டாலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடித்து கடந்த 20ம் தேதி வெளிவந்துள்ள தெலுங்குப் படம் 'பரத் அனி நேனு'. இரண்டே நாட்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் நாளில் 53 கோடியும், இரண்டாம் நாளிலும் சுமார் 50 கோடியும் இப்படம் வசூலித்துள்ளது என்கிறார்கள். நேற்றைய வசூலும் 50 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியிருந்தால் 'பாகுபலி 2' படம் அல்லாத ஒரு தெலுங்குப் படம் வசூலித்துள்ள மிகப் பெரும் வசூல் தொகை இதுவாக இருக்கும்.
இப்படத்தை ரஜினிகாந்த் விரைவில் பார்க்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படம் ஒரு அரசியல் கதை என்பதால், இப்படத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். பொதுவாக, மகேஷ்பாபு நடித்த படங்களை தமிழில் விஜய்தான் ரீமேக் செய்து நடிப்பார்.
விஜய் ஏற்கெனவே அரசியல் வசனங்கள் பேசி நடித்துள்ளதால் அவர் இந்தப் படத்தின் ரீ-மேக்கில் நடித்தால் பெரிய வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. மற்ற நடிகர்களை விட விஜய்க்கு இந்தப் படத்தின் கதையும் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள்.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படம் கூட அரசியல் படம்தான் என்று ஒரு பேச்சு உள்ளது. அப்படியிருந்தால் அவர் 'பரத் அனி நேனு' படத்தின் ரீமேக்கில் கவனம் செலுத்த மாட்டார் என்றும் ஒரு தகவல் உள்ளது. எப்படியோ, இப்படத்தின் உரிமையை வாங்குபவர்கள் நிச்சயம் வெற்றியை எதிர்பார்த்தே படம் எடுக்கலாம் என்கிறார்கள்.