வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்றும், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரும் தனித்தனியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அபிஷேக்கின் செல்போனை எடுத்து, அவர் யார் உடன் எல்லாம் பேசுகிறார் என்பதை ஐஸ்வர்யா ராய் கண்காணித்ததாவும், இதனால் ஐஸ்வர்யா மீது அபிஷேக் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார்.
இதனிடையே அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதியருக்கு இன்று(ஏப்., 20) திருமண நாள். 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். இதை வெளிப்படுத்தும் விதமாக அபிஷேக் தன் இன்ஸ்டிராகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு ஐஸ்வர்யா ராய் உடனான தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.