ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'என்ஜிகே' படத்தின் படப்பிடிப்பு வேலை நிறுத்தத்திற்குப் பிறகு இன்று முதல் ஆரம்பமாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் ரகுல் ப்ரீத் சிங் கலந்து கொள்கிறார்கள்.
இப்படத்திற்காக சென்னைக்கு அருகில் மிகப் பெரிய கிராமம் செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் படப்பிடிப்பு நடக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கிறார், சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத் முதல் முறையாக நடிக்கிறார்.
செல்வராகவன் ஏற்கெனவே இயக்கி முடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் முடிந்தும் ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியாகாமல் முடங்கிக் கிடக்கிறது. சந்தானம் நாயகனாக நடிக்க செல்வராகவன் இயக்கி வந்த 'மன்னவன் வந்தானடி' படம் கொஞ்சம் எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 'என்ஜிகே' படத்தை முடித்த பிறகுதான் செல்வராகவன் மற்ற படங்களின் வேலையைத் தொடர்வார் என்கிறார்கள்.