விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து. ஆரம்பகாலத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்தவர் பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தற்போது தனியாக நடித்து வருகிறார். அவரது மகன் வாசன் கார்த்தி நடிக்கும் படம் பாசக்கார கூட்டம். இந்தப் படத்தின் 4 பாடல்களையும் சிங்கமுத்து எழுதியிருக்கிறார்.
3இதன் மூலம் அவர் சினிமா பாடலாசிரியர் ஆகியிருக்கிறார். அந்த பாடல்களுக்கு அறிமுக இசை அமைப்பாளர் ஸ்டீபன் ராயல் இசை அமைத்துள்ளார். இவர் எம்.எஸ்.விஸ்நாதன் குழுவில் பல வருடங்களாக சவுண்ட் என்ஜினீயராகவும், ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றியவர். படத்தை செல்வராஜ் என்பவர் இயக்குகிறார்.
"எனக்கு காமெடிதான் எழுத வரும் பாட்டு எழுத வராது என்று முதலில் மறுத்தேன். ஒரு பாடலுக்கான சூழலை சொல்லி முயற்சி பண்ணுங்க நல்லா இருந்தா எடுத்துக்கிறோம்னு சொன்னாங்க. நானும் எழுதி கொடுத்தேன். அதென்னமோ அவுங்களுக்கு பிடிச்சி போச்சி. அம்புட்டு பாடலையும் எழுதச் சொல்லிட்டாங்க எங்குலசாமி மல்லிகை பூ என்கிற பாட்டை சின்மயியும், ஹரிசரனும் பாடியிருக்காங்க. அதை கேக்குறப்போ இது நாம எழுதுனா பாட்டான்னு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது" என்கிறார் சிங்கமுத்து.