சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சினிமாவில் நடிகைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லை குறித்து ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், டோலிவுட் என பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். பாடகிகளுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாக பாகிஸ்தான் நாட்டு பாடகி மீஷா ஷபி என்பவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்,
பொதுவாக ஒரு துறைக்கு புதிதாக வரும் பெண்கள் தான் பாலியல் தொல்லைக்கு ஆளாவார்கள். ஆனால் நான் பெரிய பாடகியாக பிரபலமான பிறகு அதுவும் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவான பிறகு எனது சக பாடகரான அலி ஜாபர் என்பவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
இது ஒரு முறை அல்ல, பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இதனால் நானும், எனது குடும்பமும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியிருக்கிறோம் என்று கூறும் மீஷா ஷபி, இந்த விசயத்துக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நான் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற விசயங்களை பெண்கள் வெளிப்படையாக பேச வேண்டும். வாய் மூடி இருக்காமல் துணிந்து பேசும் போது தான் இந்த கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முடியும். அப்போதுதான் பாலியல் தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்துள்ளார் மீஷா ஷபி.