ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
''அரசியல் கலக்காமல், மக்கள் நலனுக்காக பணிபுரிவேன்,'' என, நடிகர் சிம்பு கூறினார். காவிரி விவகாரம் தொடர்பாக சமீபத்தில் குரல் கொடுத்த சிம்பு, திடீரென இன்று(ஏப்., 19) சேலத்திற்கு வருகை தந்தார். அவர் அங்குள்ள கன்னங்குறிச்சி, மூக்கன் ஏரியை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
யாரையும் குறை சொல்லாமல், புதிய அணுகுமுறையுடன் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கில், ஏரியை பார்வையிட்டேன். எதிர்காலத்தில், ரசிகர்கள், சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து, நீர்நிலைகளை பாதுகாக்கவுள்ளேன். அதுகுறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இதில், அரசியல் கலக்காமல், மக்கள் நலனுக்காக பணிபுரிவேன். காவிரி பிரச்னை தொடர்பாக எதுவும் பேசவில்லை. அரசியல், மக்களுக்கு பயனுள்ள பொது விஷயம் குறித்து பேச தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.