பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் என தமிழகத்தில் பல பிரச்னைகள் நிலவுகின்றன. குறிப்பாக காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என பல வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திரையுலகினர் கூட மவுனப்போராட்டம் நடத்தினர். ஐபிஎல்., போட்டிகள் இட மாற்றம் செய்யப்பட்டன.
இதனிடையே கடந்த 45 நாட்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நிலவி வந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது. ஓரிரு நாளில் படங்கள் வெளியாகும் என தெரிகிறது. இதனிடையே காவிரிக்காக படங்களின் வெளியீடுகளையும் தள்ளி வைக்கலாம் என கூறியுள்ளார் உதயநிதி.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... "ஐபில் போட்டிகள் போல் தமிழ்நாட்டில், தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா..? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே" என பதிவிட்டிருக்கிறார்.