ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரின் அடுத்த அதிரடி குற்றச்சாட்டு பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வெங்கட அப்பாராவ் மீது பாய்ந்துள்ளது.
தயாரிப்பாளர் அப்பாராவ் 100 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதில் நானும் உண்டு. 16 வயது சிறுமியை கூட அவர் விட்டுவைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவரது இந்த குற்றச்சாட்டு வெளிவந்ததும் பல பெண்கள் தொலைக்காட்சிகளுக்கு போன் செய்து தங்களுக்கு அப்பாராவால் நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறியிருக்கிறார்கள். அதனை தெலுங்கு சேனல்கள் நேற்று ஒளிபரப்பியது. அடுத்த குற்றச்சாட்டு யார் மீதோ என்று அல்லு சில்லாகி கிடக்கிறது தெலுங்கு சினிமா.
குற்றம்சாட்டப்பட்டுள்ள அப்பாராவ் சிரஞ்சீவி நடித்த பல மெகா பட்ஜெட் படங்களை தயாரித்தவர், அவரது குடும்ப நண்பர். காங்கிரஸ் கட்சி பிரமுகர். சட்டசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவர் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.