ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். திரைத்துறையினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டன்ட் யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி, இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, சிறுமி மரணம் குறித்து கேட்கும்போதே மனம் கலங்குகிறது. சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை பார்த்தால் ஆத்திரம் வருகிறது. பெண் குழந்தைகளை வளர்க்க பாடம் எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது என்றார்.