ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்படன அல்லவா..? அதில் சிறந்த ஆடியோகிராபிக்கான விருது 'வில்லேஜ் ராக்ஸ்டார்' படத்தில் பணியாற்றிய மல்லிகா தாஸ் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிபடுத்தியுள்ளார் சவுன்ட் டிசைனரான, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி.
“தேர்வு கமிட்டியில் இருக்கும் பலருக்கும் ஒலிப்பதிவாளருக்கும் ஒலி வடிவமைப்பாளருக்குமான வித்தியாசம் என்பது தெரியவில்லை. இந்த குழப்பம் சிறந்த ஆடியோகிராபி விருதுக்கான நபரை தேர்வு செய்வதிலும் பிரதிபலித்திருக்கிறது. ஆடியோகிராபி தொடர்பான எந்த கருவியையுமே தொட்டிராத நபருக்குத் தான் இந்தமுறை விருது வழங்கப்பட்டுள்ளது என்பது வெட்ககேடானது. விருது தேர்வுக்கான குழுவில் தகுதி வாய்ந்த தொழிநுட்ப வல்லுனர்களையும் இடம்பெற செய்ய வேண்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி