ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, அடுத்தடுத்து வெளியிட்டு வரும் தகவல்களால் அதிர்ந்து போய் கிடக்கிறது தெலுங்கு திரையுலகம். மிகவும் கண்ணியமானவர்களாக பார்க்கப்பட்ட முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை போட்டோ ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்.
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பல முன்னணி நடிகைகள் முன்வந்துள்ளனர். நடிகைகள் அபூர்வா, சுனிதா ரெட்டி, ஸ்ருதி, சந்தியா நாயுடு, ஹேமா, நாகலட்சுமி உள்ளிட்டோர் ஸ்ரீரெட்டிக்கு ஆதராவக களத்தில் இறங்கி உள்ளனர்.
இவர்கள் நேற்று ஐதராபாத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பல நடிகைகள், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் பற்றி விவரித்தபோது கதறி அழுதனர். அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள். பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள். இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள்.
80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது. வயதான பெண்களையும் விடுவது இல்லை. செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்னையில் தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.