ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரையுலகத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் பெண்களிடம் பாலியல் ரீதியாக தவறாக அணுகுபவர்கள் மீதான குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் 'கேஸ்டிங் கௌச்' என அழைக்கப்படும் இந்த விவகாரத்தால் தெலுங்குத் திரையுலகம் தற்போது ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது.
நடிகை ஸ்ரீரெட்டி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என குற்றம் சாட்டி சில புகைப்படங்களை வெளியிட்டார், தனது ஆடைகளைக் களைந்து போராட்டம் நடத்தினார். அவருக்கு எதிராகத் தடை விதித்த தெலுங்கு நடிகர்கள் சங்கம் உடனடியாக அந்தத் தடையை நீக்கியது. மனித உரிமை கமிஷன் அதில் தலையிட்டதும் காரணமாக அமைந்தது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக சில முன்னணி டாப் நடிகர்கள் மீதும் பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெரிய நட்சத்திரக் குடும்பத்து கடைசி தம்பி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் என சில பெண்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள். இந்த பட்டியல் இன்னும் அதிகமாகும் என டோலிவுட் வட்டாரம் மிரண்டு போய்க் கிடக்கிறதாம். இவற்றையெல்லாம் எப்படி தடுத்து நிறுத்துவது என பலரும் குழம்பிப் போயிருக்கிறார்களாம்.
அடிக்கும் வெயிலை விட இந்த விவகாரம் தான் மிகவும் 'ஹாட்' ஆக இருக்கிறது என்கிறார்கள்.