ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"ஏஸ் ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்..." என்னடா சீட்டுக்கட்டில் இருக்கும் பெயராக வருகிறது என்று நினைக்கிறீர்களா...? ஆம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் உருவாக இருக்கும் புதிய படத்தின் நாமகரணம் தான் இது. ஏ.கே.என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பிரபல தெலுங்கு பட நிறுவனம், முதன்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் 3டி படமாக இப்படத்தை தயாரிக்கிறது. ஷாம், அல்லரி நரேஷ், வைபவ், ராஜூ சுந்தரம், சினேகா உல்லல், நீலம் ஆகியோர் இப்படத்தில் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் நடிக்கிறார். அனில் சுங்கரா என்பவர் இப்படத்தை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார். இவர் நியூயார்க் பிலிம் இன்ஸ்டியூட்டில் திரைப்பட இயக்கம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளமைத்துள்ளலுடன் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த பொழுது போக்கு படமாக உருவாகும் இப்படம், இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான 3டி படமாக உருவாக இருக்கிறது. இதற்காக அமெரிக்காவில் இருந்து ஸ்டீரியோஸ்கோபிக் உபகரணங்களும் அதனை இயக்கும் தொழில் நுட்பக்கலைஞர்களான ஸ்டீரியோகிராபர்ஸும் வரவிருக்கிறார்கள். பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பிரபல இசையமைப்பாளர் பப்பிலஹரி மகன் பப்பாலஹரி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
கடந்த 23ம் தேதி சென்னையில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை கவர்னர் ரோசய்யா தொடங்கி வைத்தார். மேலும் இப்படத்தின் துவக்க விழாவில் நடிகர்கள் தியாகராஜன், சிம்பு, ஸ்ரீகாந்த், பிரசாந்த், மகத், இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாங்காக்கில் நடைபெற இருக்கிறது.