ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் கை மற்றும் இடுப்பு பகுதியில் அடிபட்டுள்ளது. எம்.ஜி.ஆர். - சிவாஜி காலம் தொட்டே இப்போது உள்ள சிம்பு, ஜெயம் ரவி உள்ளிட்ட மூன்று தலைமுறையினருக்கு பாட்டு எழுதி வருபவர் கவிஞர் வாலி. சில தினங்களுக்கு முன்னர் இவர், தன்னுடைய வீட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார். இதில் அவர் இடுப்பு மற்றும் கையில் பலத்த அடிபட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலி, வீடு திரும்பியுள்ளார். பலத்த அடி என்பதால் இன்னும் 2 மாத காலத்திற்கு வாலியை ஓய்வில் இருக்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.