ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒரு பாடலை வியாபார ரீதியாக பயன்படுத்தும்போது அந்த பாடலுக்கு இசை அமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோருக்கு ராயல்டி வழங்க வேண்டும். ஆனால் இதுவரை பாடகர்களுக்கு அது இல்லாமல் இருந்தது. பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட சிலரது முயற்சியால் இந்தியன் சிங்கர் ரைட்ஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு தொடங்கப்பட்டு அதன் மூலம் சட்டரீதியாக போராடி இப்போது அந்த உரிமையை பாடகர்களும் பெற்றுள்ளனர்.
அதன் பலனாக இந்த ஆண்டு பாடகர்களுக்கு 51 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ராயல்டியாக கிடைத்துள்ளது. அதனை பாடகர்களுக்கு வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் டான்டன் இதனை பாடகர்களுக்கு வழங்கினார். பாடகர்கள் யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
பின்னர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது: பாடகர்களுக்கு பாடுவதை விட்டால் வேறு தொழில் தெரியாது. என்னை போன்றவர்கள் நடிப்பு போன்று வேறு வித்தைகள் செய்து பிழைத்துக் கொள்கிறோம். ஆனால் மற்றவர்களுக்கு அது தெரியாது. அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த ராயல்டி உதவும். இப்போது வந்திருப்பது 25 சதவிகிதம்தான். இன்னும் 75 சதவிகிதம் ராயல்டி வரவேண்டியது இருக்கிறது. இது வெறும் ராயல்டி மட்டுமல்ல பாடகர்களுக்கான அங்கீகாரம். என்றார்.
விழாவில் பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், மனோ, உன்னி கிருஷ்ணன், சித்ரா, விஜய் யேசுதாஸ், வாணி ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.