அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வரும் கார்த்தி, சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் நீடி நாடி ஒகே கதா என்ற தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
ரவி உடுகுலா இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு, சாட்னா டைட்னஸ் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கார்த்தியிடம் ரவி உடுகுலா படத்தின் கதையைச் சொல்லிவிட்டதாகவும், அதற்கு கார்த்தி ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த தகவல்களைத்தான் மறுத்து அறிக்கை வெளியிட்டார் கார்த்தி.
முன்னணி ஹீரோக்களின் அடுத்தப்படம் குறித்து அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை யூகமாக பல்வேறு செய்திகள் வருவது வாடிக்கையான விஷயம் தான். அப்படித்தான், கார்த்தி அடுத்து நடிக்க இருப்பதாக மேற்கண்ட செய்தியும் வெளியானது. அதற்கு பதறியடித்துக் கொண்டு கார்த்தி மறுப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
கடைக்குட்டி சிங்கம் படத்தை முடித்தவுடன் கார்த்தி 17 என்று பெயரிடப்பட்டுள்ள அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் இன்னொரு படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானால் கார்த்தி 17 படத்துக்கு குழப்பம் ஏற்படும் என்பதால் தான் விளக்கம் அளித்தாராம்.