ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடந்தது. இதில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக சென்னையில் நடைபெறுவதாக இருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு "நான் ஒன்றும் சொல்லலப்பா" என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது போராட்டத்தையும், ஐபிஎல் கிரிக்கெட் ரத்தையும் கிண்டல் செய்திருந்தார். இதற்கு பதிலளித்து இயக்குனர் பாண்டிராஜ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
உண்மையான விவசாயி யாரும் ஐ.பி.எல். பார்க்க கூடாது என்றோ, எல்லோரும் எங்களுக்கு போராடுங்கள் என்றோ சொல்ல மாட்டார்கள். நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் நாம் சாப்பிடுவதற்கு விவசாயம் செய்து கொண்டிருப்பார்கள், அதுதான் விவசாயி. அந்த வலி புரிந்தவர்கள் போராடுகிறார்கள். புரியாதவர்கள்... போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது.
தயவு செய்து அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுபவன் விவசாயி. வெங்கட் பிரபு சார், சென்னை சூப்பர் கிங்ஸ்சை ரசியுங்கள். அது உங்கள் உரிமை. தயவு செய்து விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.
வெங்கட் பிரபு கிரிக்கெட்டை மையமாக வைத்து சென்னை 28 படத்தை இரண்டு பாகமாக இயக்கினார் என்பதும், பாண்டிராஜ் விவசாயத்தை மையமாக வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.