ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அதிக கட்டணங்களை வாங்குவதைக் குறைக்க வலியுறுத்தி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்கள் அடங்கிய குழுவினர் வரும் 17ம் தேதி தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்கள்.
இதனிடையே, சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் நிர்வாகம் தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்த்து, இந்திய போட்டி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது. அதில் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்த்தும் அவர்கள் புகார் அளித்துள்ளார்கள் என்கிறார்கள்.
அது பற்றி தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் விசாரித்த போது, தயாரிப்பாளர் சங்கத்தினர் சொந்தமாக மாஸ்டரிங் செய்வதற்கான தொழில்நுட்பத்தை நிறுவிவிட்டார்கள். இனி, அவர்களே படத்தை மாஸ்டரிங் செய்து அதை தியேட்டர்களுக்கு அளிக்க உள்ளதாகவும், அதை தியேட்டர்காரர்கள் வேண்டுமென்றால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட டிஜிட்டல் சேவை நிறுவனத்திடம் இருந்து மட்டுமே தான், தியேட்டர்காரர்கள் மாஸ்டரிங் செய்யப்பட்ட கன்டன்ட்டை வாங்குவோம் என்றால் அது ஏகபோகமாக செயல்படுவது. நாங்கள் தான் கன்டன்ட்டை உருவாக்குகிறோம், நாங்கள் தான் அதைத் தர முடியும். இனி, அவர்களது முடிவு,” என்கிறார்கள்.
தயாரிப்பாளர்களை அச்சுறுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை விதித்த சத்யம், ரோகிணி, அபிராமி ஆகிய தியேட்டர்களுக்கு இனி புதிய படங்கள் தரப் போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்ததாக செய்திகள் வெளியானது. அதை எதிர்ப்பதற்கே தற்போது ரோகிணி தியேட்டர் சார்பில் இந்திய போட்டி ஆணையத்தை அணுகியுள்ளதாகத் தெரிகிறது.
அப்படி ஒரு விசாரணை வந்தால் ஏகபோகமாக செயல்படும் மற்ற தியேட்டர்காரர்களுக்கும், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தியேட்டர்காரர்களிடம் போட்ட சிக்கலான ஒப்பந்தத்திற்கும் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள். குறிப்பாக திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளராக இருக்கும் ரோகிணி பன்னீர்செல்வம், உள்ளிட்ட சில நிர்வாகிகள் அவர்களது தியேட்டர்களுக்கு மட்டும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் இலவச சேவை வழங்கியதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
அதனால், பல தியேட்டர்காரர்கள், தயாரிப்பாளர் சங்கம் பக்கம் சாய முடிவெடுத்ததே திரையரங்கு சங்கத்தினரின் இந்த புகார் என்கிறார்கள்.
அடுத்த சில நாட்களில் இந்த விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு நிகழ வாய்ப்புள்ளது.