ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கியூப் கட்டண உயர்வு, தியேட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்வைத்து தமிழ் திரையுலகம் கடந்த மார்ச் 1ந் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறது. இதுகுறித்து நடந்த பலசுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த நிலையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு இதில் தலையிட்டுள்ளது.
அதன்படி தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, நேற்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதைத் தொடர்ந்து விஷால் நேற்று சென்னை கோட்டையில் அமைச்சரை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது. வழக்கமாக இதுபோன்ற சந்திப்பிற்கு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் விஷால் நேற்று எதுவும் கூறாமல் கிளம்பிச் சென்று விட்டார். பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடக்கும் என்று தெரிகிறது.
அமைச்சர் ஒரு தீர்வை சொல்லி அதற்கு சம்மதம் தெரிவிக்குமாறு விஷாலிடம் கூறியதாக தெரிகிறது.