ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரிய வகை மானைக் கொன்ற வழக்கில் கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கான் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து அவர் தனி விமானத்தில் மும்பை சென்றார். கடந்த இரண்டு நாட்களாக இது பற்றி எதுவும் கூறாமல் இருந்த சல்மான்கான் அவருடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து டிவீட் செய்திருக்கிறார்.
“கண்ணீர் நன்றி. என்னுடன் இருக்கும் அன்பாவனர்களுக்கும், எப்போதும் நம்பிக்கை இழக்காதவர்களுக்கும்...உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அந்த டிவிட்டருக்கு மட்டும் 85000 லைக்குகளும், 15 ஆயிரம் ரிடிவீட்டும், 12 ஆயிரம் கமெண்ட்டுகளும் இதுவரை கிடைத்துள்ளன. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றவருக்கு கிடைத்துள்ள வரவேற்பு இது.