ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்தியத் திரையுலகில் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் வெளிவந்து பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தது. அதன் பின் சரித்திரப் படங்களின் மீது பலருக்கும் ஆசை வந்துவிட்டது. ஒரு மகாபாரதக் கதையை படமாக்க ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் முயன்று வருகிறார்கள். 1000 கோடி ரூபாய் பட்ஜெட் என அறிவித்தார்கள். அதன் பின் சத்தத்தைக் காணோம்.
தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க 'சை ரா' படத்தை ஆரம்பித்துள்ளார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்போது விக்ரம் நடிக்க உள்ள 'மகாவீர் கர்ணா' படம் பற்றி புதிய தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கத்தை இயக்குனர் விமல் முடித்துவிட்டாராம். தமிழ், ஹிந்தியில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாராக உள்ளதாம். அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. பின் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் படத்தை டப்பிங் செய்து வெளியிட உள்ளார்களாம்.
படத்தின் ஸ்கிரிப்ட்டை சமீபத்தில் இயக்குனர் விமல் சபரிமலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளாராம். அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.