மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரிக்காக தமிழ் திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன.
அதன் விபரம் :
* நடிகர் விஜய் முதல் ஆளாக மேடைக்கு வந்து, போராட்டம் முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன் புறப்பட்டு சென்றார்.
* சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்களும் போராட்டம் முடியும் முன்னரே புறப்பட்டு சென்றனர்.
* கமல், ரஜினி போராட்டம் முடிவதற்கு ஒருமணி நேரம் முன்னர் அடுத்தடுத்து வந்தனர்.
* மௌன போராட்டமாக தொடங்கி சிலர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்ப சிறிய பதட்டம் நிலவியது. இதனால் பல நடிகர்கள் முகம் மாறியது.
* கமல், ரஜினி இருவரும் அருகருகே அமர வைக்கப்பட்டிருந்தாலும் அவ்வளவாக இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ரஜினி ஏதோ யோசனையில் இருந்தார்.
* முதலில் விஜய் பக்கத்திலேயே அமர்ந்திருந்த சிவகார்த்திகேயன், ரஜினி வந்ததும் அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தார்.
* சிவா கார்த்தி கேயன் சென்ற பிறகு ரஜினி பக்கத்தில் தனுஷ் அமர்ந்தார்.
* தனுஷ் - சிவகார்த்திகேயன் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அனேகமாக இதன் மூலம் மீண்டும் இருவரது நட்பு புதுப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
* விஜய் சேதுபதி மேடையின் ஓரத்தில் அமர்ந்து யாரிடமும் அதிகம் பேசாமல் அப்படியே சென்று விட்டார்.
* கூட்டத்தின் இடையில் விஜய், ரஜினி ரசிகர்களுக்கு கை காண்டியதும் ரசிகர்கள் சத்தம் போட்டனர்.
* கமலும் ஐசரி கணேசும் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.