ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை தமிழ் திரையுலகத்தினர் நடத்திய மவுன போராட்டத்தை நடிகர் சங்க தலைவர் நாசர் துவக்கி வைத்தார். சேயார் கதிரேசன் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.
தொடர்ந்து இயக்குனர் ஆர்.கே.செல்வமணி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசித்தார். அதில் மக்களை பாதிக்கும் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டாம், காவிர மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 தீர்மானங்கள் மத்திய அரசை வலியுறுத்தி இடம்பெற்றிருந்தன. பின்னர் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், இந்த தீர்மானங்களை வெறுமனே வாசிக்கப்பட்டதுடன் நிற்காமல், திரையுலககை சேர்ந்த 30 பேரிடம் கையெழுத்து பெற்று, அதனை கவர்னரிடம் அளிக்க உள்ளோம் என்றார்.
போராட்ட கோஷங்களை நாசர் வாசிக்க, கமல், ரஜினி உள்ளிட்டோர் முழக்கமிட்டமிட்டனர். தேசிய கீதம் பாடி போராட்டம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.