விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மும்பையில் இன்று பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் ஆரம்பமாகின்றன. இன்றைய துவக்க விழாவில் ஹிந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா ஆகியோர் நடனமாட உள்ளார்கள். இதற்காக கடந்த சில நாட்களாக அவர்கள் ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமன்னாவிற்கு இந்த விழாவில் 10 நிமிடம் மட்டும் நடனமாடுவதற்காக சுமார் 50 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஐபிஎல் துவக்க விழாவில் நடனமாடுவது பற்றி தமன்னா கூறுகையில், “ஐபிஎல் துவக்க விழாவில் நடனமாடுவதற்கு நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இதைவிட சிறந்த விளையாட்டு நிகழ்ச்சி இல்லை. இன்றிரவு ஆரம்பமாகும் இந்த கிரிக்கெட் போட்டி மீது நாம் அனைவருமே வெறி பிடித்தவர்களாக இருக்கிறோம். மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகியவற்றை எனது சொந்த ஊர் போல நினைப்பேன். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய பாடல்களுக்கு நான் நடனமாட உள்ளேன்.
நான் சிஎஸ்கேவின் ரசிகை. இரண்டு வருடங்கள் கழித்து அந்த அணி வருகிறது. நான் தோனியின் மிகப் பெரிய ரசிகை. அவர்கள் விளையாடுவதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.