ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில், வெள்ளி விழா படங்களைக் கொடுத்தவர்கள் கூட, வெற்றியைத் தலைக்கு ஏற்றாமல் அமைதியாக போகிறார்கள். ஆனால், 'பீட்சா, ஜிகர்தண்டா' என்ற இரண்டு படங்களைக் கொடுத்துவிட்டு, கார்த்திக் சுப்பராஜ் திடீரென சர்ச்சையைக் கிளப்பியிருப்பது, ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.
சுப்பராஜ், மொழியே இல்லாமல் 'மெர்க்குரி' என்ற படத்தை எடுத்துள்ளார். ஸ்டிரைக்கால் அதை வெளியிட முடியவில்லை. மொழியே இல்லாத இப்படத்தை, ஹிந்தியில் தமிழ்நாட்டில் வெளியிடுவேன் என காமெடி செய்திருக்கிறார்.
'காலா' வெளிவர வேண்டும் என்பதற்காக, ரஜினியும் தனுஷூம் திரைமறையில் சுப்பராஜை வைத்து காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்துள்ளது. அதனால், அவரும், தனுஷும் சுப்பராஜுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ், அடுத்து ரஜினி படத்தை இயக்குவதும், அதற்கடுத்து தனுஷை படத்தை இயக்குவதும் தான் காரணம் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
மொழியே இல்லாத படத்திற்கு, 'ஹிந்தி படம்' என்ற அடையாளத்தைக் கொடுத்து, சுப்பராஜ் காமெடி செய்வது போலிருந்தாலும், அதன் பின்னால் சீரியசான அரசியல் இருக்கிறது.