ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரையுலகம் சார்பாகவோ, நடிகர் சங்கம் சார்பாகவோ நடைபெறும் போராட்டங்களில் முன்னணி நடிகைகள் எப்போதுமே கலந்து கொள்வதில்லை. போராட்டத்தின் தீவிரத்தைப் பொறுத்து சில முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்கள்.
நடிகர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், முன்னணி நடிகைகள் பலரும் கலந்து கொள்ளவில்லை. அந்தப் போராட்டத்தைக் கூட இளைஞர்களான மாணவர்கள் முன்னெடுத்துச் சென்றதால் தான் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் வந்து தலை காட்டாத அஜித் கூட வந்தார்.
இப்போது காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் விவகாரம் என தமிழ் மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்காக நடிகர் சங்கம் அறவழிப் போராட்டத்தை வரும் 8ம் தேதி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் உணர்வுள்ள முன்னணி நடிகைகள் அவர்களாக வந்து கலந்து கொண்டு அவர்களது ஆதரவை தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் தற்போது அரசியல்வாதிகளாக மாறியுள்ளதால் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்க்கக் கூடாது. கமல் பங்கேற்பேன் என கூறிவிட்டார். ரஜினி எதுவும் சொல்லவில்லை.
அஜித், விஜய் இருவரும்தான் தற்போதைய இளைஞர்களைக் கவர்ந்த நடிகர்களாக உள்ளார்கள். எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லாத அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
மக்களிடம் பணம் இருந்தால்தான் அவர்கள் படம் பார்க்க வருவார்கள் என்ற எண்ணம் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் வர வேண்டும். கர்நாடகாவில் தங்கள் படம் வெளியாகவில்லை என்றாலும் பரவாயில்லை என்று எத்தனை நடிகர்கள், நடிகைகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் என்று பார்க்கத்தான் போகிறோம்.