ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்று சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் 2017ம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்தியது. இந்த விழாவில் அந்த நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியது. இதனை அந்த நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷாலிடம் வழங்கினார்.
அதைப் பெற்றுக் கொண்ட அதே நேரத்தில் அதனை பெப்சி தொழிலாளர்களுக்காக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் அந்த 10 லட்சத்தை வழங்கினார்.
இதுகுறித்து விஷால் கூறும்போது "கடந்த ஒரு மாதமாக தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. அவர்கள் எப்படிப்பட்ட துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதை அறிவோம். இக்கட்டான இந்த நேரத்தில் அவர்களுக்கு இந்த தொகை உதவட்டும் என்று அதனை பெப்சிக்கு வழங்கினோம். விரைவில் எல்லா பிரச்சினைகளும் முடிந்து தொழிலாளர்கள் விரைவில் பணிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்" என்றார் விஷால்.