ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெர்சல் படத்தை அடுத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன் தெரிவித்தார் அட்லீ. அவர் சொன்ன தகவல் உண்மையில்லை என்று தற்போது தெரிய வந்திருக்கிறது.
ஷங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லீ, 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு விஜய்யை வைத்து 'தெறி' மற்றும் 'மெர்சல்' என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கினார்.
மெர்சல் படத்தால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என திரையுலகில் கூறப்படுகிறது. இதனால் அட்லீக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜய்யும் அட்லீ புறக்கணித்துவிட்டார்.
இதனிடையே சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லீ, 'அடுத்து தெலுங்கில் படம் இயக்கப் போகிறேன். தெலுங்கின் மிகப்பெரிய ஸ்டார் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர் யார் என்ற விவரத்தை விரைவில் வெளியிடுவேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அவரை சில மீடியாக்கள் தொடர்பு கொண்டபோது, தன்னுடைய அடுத்த படம் இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்திருக்கிறார் அட்லீ. இதன் மூலம் அட்லீ சொன்ன தகவல் உண்மையா பொய்யா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.