ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். '24 AM STUDIOS' நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்றுவரும் நிலையில் காமெடியன் கேரக்டருக்கு சதீஷை சிபாரிசு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். சதீஷை பயன்படுத்த இயக்குநர் ரவிகுமாருக்கு விருப்பமில்லை. தன்னுடைய முதல் படமான 'இன்று நேற்று நாளை' படத்தில் நடித்த கருணாகரன் தான் நடிக்க வேண்டும் என்பதில் ரவிகுமார் உறுதியாக இருந்திருக்கிறார்.
அதனால், கருணாகரனே காமெடி ரோல் பண்ண உள்ளார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பணியாற்றுகிறார் கருணாகரன்.
இந்த விவகாரம் தொடர்பாக சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் ரவிகுமாருக்கும் இடையில் ஏற்பட்ட சின்ன புகைச்சல் இன்னும் அணையவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் நியூஸ்.