ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல தெலுங்கு தொகுப்பாளினி ராதிகா ரெட்டி. தனியார் சேனல்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். 30 வயதான ராதிகா ரெட்டிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பதான் கணவரை விவாகரத்து செய்தார். கடந்த 6 ஆண்டுகளாக தன் பெற்றோருடன் ஐதராபாத் முசாப்பேட்டையில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராதிகா ரெட்டி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். ராதிகா ரெட்டி எழுதி வைத்திருந்த கடிதத்தில் "எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது மனசாட்சியே காரணம்" என்று எழுதியிருக்கிறார். போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.