ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இருப்பவர் நயன்தாரா. திரைப்படங்களில் அவர் காதல் காட்சிகள் பேசப்பட்டதை விட, நிஜ வாழ்க்கையில் அவருடைய காதல்கள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன.
சிம்பு, பிரபுதேவா இருவரையும் மிகத் தீவிரமாகக் காதலித்து அவர்களை விட்டுப் பிரிந்தவர் நயன்தாரா. அதன்பின் அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்று வழக்கம் போல வதந்தி பரவியது. அதன் பின் அதுவும் வழக்கம் போல வதந்தியல்ல உண்மைதான் என்று ஊருக்கு உணர்த்தியது.
சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தன் வருங்காலக் கணவர் என அவரது பேச்சில் குறிப்பிட்டார் நயன்தாரா. அது விக்னேஷ் சிவனைத்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இதனிடையே, நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக டோலிவுட்டில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்துவிட்டதாகவும், இருவரது குடும்பத்தினரும், மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
தற்போது நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கான இமேஜ் எந்த விதத்திலும் மாறுவதில்லை. அதற்கு சமீபத்திய உதாரணம் சமந்தா. அதனால் தான் நயன்தாராவும் இதற்கு மேலும் திருமணத்தைத் தள்ளிப் போடாமல் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.